Wednesday, February 06, 2019



"சமஸ் "அவர்களின் 

கட்டுரையை 

முன்னிறுத்தி ...!!!













டாக்டர். ஜான் செல்லத்துரை சனிக்கிழமை (2-2-19) அன்று குடும்பத்தோடு.வந்திருந்தார். .குஜராத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மனித மோதல்களும்  தீர்வுகளும் என்பது பற்றி CONFLICT  தலைப்பில் ஆராய்சசி செய்து முனைவர் பட்டம்  பெற்றவர் .உலகம்பூராவும் சென்று  காந்திய சிந்தனைகளை பரப்பி வருபவர்  ஜான் .



 நெல்லை மாவட்டம் சேரன்மாதேவிக்காரரான ஜான் ம.தி.,தா இந்து கல்லூரியில் பட்டப்படிப்பினை முடித்தவர் .நாகபுரியிலி வசித்தவர் கடந்த சில ஆண்டுகளாக ஜல்கானில்  காந்தி  சிந்தனை மையத்தில் டீனா க  பணியாற்றுகிறார்.

காந்தி பற்றியும், மார்க்ஸ் பற்றியும் நாங்கள்   இருவரும் கருத்துக்களை பரிமாறிக்கொள்வோம். 

இந்து  தமிழ் இதழில் "சமஸ்" எழுதி காந்தி நினைவு நாளில் வந்திருந்த கட்டுரைப்பற்றி பேசினோம். . சம்ஸ் அவர்கள் ஒரு சிறந்த "காந்தியர்/".

காந்தி அடிகளுக்கு மூன்று இலக்குகள் உண்டு .

!.இந்து -முஸ்லீம் ஒற்றுமை

2.தீண்டாமை ஒழிப்பு,

3.சுதேசி இயக்கம்.

இந்த மூன்றும்  நிறைவேறினால் பிரிட்டிஷாருக்கு இங்கு வேலை இல்லை என்று அமெரிக்க பத்திரிகையாளரும் காந்தி கொடுத்த பெட்டியை சம்ஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

ஜானும் நானும் இது பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.காந்தி வன்முறையை எதிர்த்தார் . அரசு வன்முறையை எதிர்த்தார்> அவரைப்பொறுத்தவரை அரசு என்பதும் கூட  வன்முறை இயந்திரம் என்ற வகையில் நாங்கள் பேசினோம்.

"மனித குலா வளர்ச்சியில் அடிமை சமுதாயம் வந்தது> அதுவே நிலப்பரப்புத்துவ சமூகமாக மாறியது> நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவின் மாக வளந்தது. முதலாளித்துவம் கம்யூனிசத்தை வளர்த்தது 'என்று நான் குறிப்பிட்டேன்.

" வளர்ச்சி தொடரும் ஏன்  அரசு என்ற அமைப்பும் உதிர்ந்து விடும்." என்றேன்.

அப்படியானால் என் நிலப்பிரபுத்துவ காலத்திலேயே அரசு உதிர்ந்தியிருக்கலாமே "என்றார்  டாக்டர் ஜான் .

 இருவரும் பேசிக்கொண்டே  இருப்பீர்கள் 5 மணிக்கு ரயில்.கிளம்புங்கள் ஜான் என்றார் அவர் மனைவி ராஜி..

எங்கள் விவாதம் நின்றது> நான் பதில் தெரியாமல் இருக்கிறேன் .!!!  


0 comments: