Wednesday, February 27, 2019




"வஞ்சத்தில் வீழ்ந்தோம் ,

வஞ்சகன்  கண்ணன் அல்ல ...!!! "



இந்திய ராணுவத்தை அதன் தீரத்தை புகழாதவர்கள் இல்லை . மொத்தம் 21இ நிமிடங்களில் அந்த தீவிர வாதிகளின் கூடாரத்தை துவம்சம் செய்து விட்டு வீர நடை போட்டு வந்த  அந்த விமானிகளில் ஒரு வீர மங்கை  உண்டு என்பது பெருமைக்குரியதாகும்..உலகமே வியக்க தீவிர  வாதிகளின் "ராடர்களை " செயலிழக்க செய்துவிட்டு காரியத்தை முடித்து விட்டார்கள் .பலம் பொருந்திய நாடுகள் கூட இத்தகைய சாகசத்தை எதிர்பார்க்க வில்லை .  

அரசியல் தலைவர்கள்,ஊடகங்கள் என்று அத்துணை பெரும் இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையை பெருமிதத்தோ டு பாராட்டுகிறார்கள்.

தொலைக்காட்ச்சியில் இதுபற்றி வாதங்கள், நடைபெறத்தான் செய்கின்றன. நடைபெறும். 

இத்தகைய விவாதங்களில் எந்தவிதமான ஆத்திரமுட்டலுக்கும்  மசியாமல் , கச்சித்தமாக வாதங்களை வைப்பவர்களில்  ஒருவர் மார்க்சிஸ்ட் கட்ச்சியை சார்ந்த கனகராஜ் அவர்கள்.அசைக்கமுடியாத தரவுகளோடு நிதானமாக தன வாதத்தை முன் வைப்பார் . அவற்றில் சிலவற்றை இங்கே தருவது சிறப்பாக இருக்கும் என்று கருது கிறேன்.

1.ஜம்மு-காஷ்மீரில் 2000க்கும்மேற்பட்ட துணை ராணுவ வீரர்களை சாலைவழியாக கொண்டுசெல்லும்போது தீவிர வாதிகள் தாக்குதல் நடக்கும் என்று எச்சரிக்கை ஒன்றை உளவு துறை காஷ்மீர் கவர்நர் சதய பால்மாலிக் அவர்களுக்கு அனுப்பியதா? 

2.கவர்னர் என் அதை முடி மறைத்தார்?

3 மத்திய உள் துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கும் தகவல் வந்ததா ?

4.அவர் என் முடிமறைத்தார்?

5.பிரதமருக்கு இது தெரியுமா?

6.துணை ராணுவத்தார் 44 பேர் ரத்தமும் சதையுமாக பிய்த்து எறியப்பட்ட செய்தி வந்தபோது பிரதமர் எங்கிருந்தார்? 

6.தேர்தல் பிரசாரப்பட பிடிப்பில் இருந்தார் என்பது உண்மையா ?

7. செவ்வாய் கிழமை ராணுவ நடவடிக்கை முடிந்ததும் பிரதமர் காலை  10 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் சென்று தேர்தல்பிரச்சாரம்   செய்தாரா?

8. அந்த மேடையின்  பின்புலத்தில் 44 துணை ராணுவ வீரர்கள் படம் வைக்கப்பட்டிருந்ததல்லவா ?

9. துணை ராணுவத்தனர் மரணத்தையும் ,அதற்கான எதிர்வினையையும் தேர்தலுக்காக பயன்படுத்துவதில்  என்ன தவறு என்று ராமசுப்பிரமணியம் அவர்கள் சொன்னதை சரி என்று எடுத்துக்கொள்ளலாமா ? 

10. உங்களை பிரசாரம் செய்யவேண்டாமென்று நாங்கள் தடுக்க வில்லையே என்று கோவை சேகர் சொல்கிறாரே -சரியா ? 

ஒன்று மட்டும் புரிகிறது.

வஞ்சத்தில் வீழ்ந்தோம்.!

வஞ்சகன் கண்ணன் மட்டுமல்ல !!!  

 


0 comments: