Sunday, October 21, 2012

தமிழா! தமிழா ! என்ன சொல்லப்போகிறாய்?........


இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து மொரிஷியஸ் தீவில் வாழ்பவர் அந்தப் தலித் பெண். மேல் படிப்பிற்காக டெல்லி பல்கலை  கழகத்தில் சேர்ந்தார் சக தமிழ் மாணவர்களோடு இணைந்து படித்தார். சில தமிழ்மாணவர்கள் ஜவகர்லால் பல்கலையில்படிக்கிறார்கள்

ஒரு நாள் தன சகமானவர்களோடு jnu . விடுதிக்கு சென்றுள்ளார். விடுதியில் தங்கியுள்ள அந்த அறை  மாணவர்கள் அவரை கற்பழித்துள்ளனர் .

கற்பழித்த மாணவர்கள் தமிழ்  நாட்டை சேர்ந்தவர்கள். . பெரும் புள்ளிகளின் வாரிசுகள்.பாதிக்கப் பட்ட பெண் நிர்கதியாக நிற்கிறார்.

அந்தப் பெண்ணிற்கு நியாயம் கேட்டு போராடுகிறார்கள்." தமிழன் கற்பழித்தால் அது குற்றமாகாதா? இலங்கை தமிழருக்காக குரல் கொடுக்கும் தலைவர்கள் என் வாய் மூடி இருக்கிறார்கள்?" டெல்லியில் மாணவர்கள் கேட்கிறார்கள்.



தலித்துகளுக்ககப் போராடும் ரவிசந்திர பத்ரன் மின்  அஞ்சல் மூலம் 
தமிழகத் தலைவர்களிடம் நியாயம் கேட்டு வருகிறார்.  

தமிழா நீ என்ன சொல்லப் போகிறாய் ....?



3 comments:

அப்பாதுரை said...

பெயர்கள் வெளி வந்தால் போராட்டம் தொடங்குமே?

kashyapan said...

வாருங்கள் அப்பாதுரை அவர்களே! அந்த தலித் பெண்ணின் நலன் கருதி பெயரை குறிப்பிடவில்லை என்று ரவிசந்திரன் பத்ரன் கூறியுள்ளார் கனிம ஊழலில்.துரை தயாநிதி அழகிரி யை இரண்டு மாதமாக தமிழகபோலீஸ் தேடிக்கொண்டு இருக்கிறது. தன்மகனை காணவில்லை என்று மத்திய அமைச்சரோ, தன் பேரனை காணவில்லைஎன்று முன்னாள் முதலமைச்சரோ போலீசிடம் புகார் செய்யவில்லை .ஏன்? எல்லாருக்கும் யார் என்ன செய்கிறார்கள் என்பது தெரியும் .நடவடிக்கை ,கைது,வழக்கு என்பது அரசியல் சார்ந்ததாகி விட்டது.இது ஒரு ஏமாற்றமே இல்லை.இந்திய மக்கள் இதற்கு தங்களை தயார் படுத்திக் கொண்டு விட்டார்கள்.தூர் தர்ஷனில் அந்த அழகான பெண் இரவு செய்தி வாசித்துவிட்டு வரும் போது அவளை ---வேண்டாம் எதையாவது உளறி விடுவேன்---காஸ்யபன்.

phantom363 said...

I cringe in shame !