Friday, January 10, 2014

விலை உயர்வுக்கு அடித்தளம் போட்டவர் 

வாஜ்பாயும், பா.ஜ.க வும் தான் ............!!!


வாஜ்பாய் தலைமையில் ஆட்சி உருவான பின்னர் தான் விலைவாசி 18% சதமாகி இரட்டை இலக்கத்திற்கு வந்தது !

காய்கறி விலை 110 சதம் உயர்ந்தது !
வெங்காயம் 700 சதம் உயர்ந்தது !

2000 ம் ஆண்டு சமையல் எரிவாயு 146 /-ரூ யாக இருந்தது ! ஒரே ஆண்டில்  இரண்டு முறை விலையை உயர்த்தி 232/-ரூ யாக்கினவர் புண்ணியவான் வாஜ்பாய் தான் ! 

1991ம் ஆண்டு தாராளமயம் வருவதற்கு முன் 3300 பொருட்களுக்கு இறக்குமதி செய்ய தடை இருந்தது !

மதுரையில்கட்சிகளின் ஊர்வலம்னடக்கும்! தொழிற்சங்க ஊர்வலம் ,இடது சாரிகள் ஊர்வலம் நடக்கும் ! நாங்களும் கலந்து கொள்வோம் ! 

வடக்கு மாசிவீதி  முடிந்து கீழ மாசிவீதி திரும்பினால்  எங்களுக்கு "சாமி"
பிடித்துவிடும் !" பதுக்கல்காரர்களைகைது செய் ! பதுக்காதே பதுக்காதே  உணவுப் பொருட்களை பதுகாதே "என்று தொண்டை நரம்புகள் புடைக்க கோஷமிடுவோம் !

( கீழ மாசி வீதியில்தான் பலசரக்கு மொத்தவியாபார கடைகளிருந்தன )

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் சட்ட திருத்தம்கொண்டுவந்தார்கள் !  50000 டன் வரை சரக்குகளைகிட்டங்கியில்வைத்துக் கொள்ளலாம் என்று திருத்தினார்கள் !

விளக்கெண்ணை 40/- ரூ யாக இருந்தது 80/-ரூ ஆயிற்று !
உளுந்து 30/- ரூ 70/- ஆயிற்று !
4/-ரூ  யாக இருந்த வெங்காயம் 60 /-ரூ ஆயிற்று ! 

இறக்குமதிக்கு தடை இருந்தது ! 

1-4-2000  அன்று 714 பொருட்களுக்கான தடையை  நீக்கினார்கள் !
1-4-2001 அன்று 715 பொருட்களுக்கான தடையை நிக்கினார்கள் ! 

ஏப்ரல்  ஒண்ணம் தேதி தான் முட்டாள் கள் (all fools day )
 வாஜ்பாயும், பா.ஜ.க வும் இந்திய மக்களை முட்டாளாக்கிய தினம் !
 
மதத்தைக் காட்டி மக்கள்    ஓற்றுமையை குலைக்க முயற்சிப்பது ஒருபக்கம் !

ஏழை எளிய மக்களின் உணவுப்பண்டங்களின் விலையை உயர்த்துவது மறுபக்கம் !
 
வெட்கமில்லாமல் வாக்குக் கேட்டு வருவார்கள் !

வடநாட்டு அரசியல் வாதி ஒருவர் கூறினார் !
"என்னால்தான் அவசரநிலை வந்தது ! என்னை ஜோட்டால் அடியுங்கள் ! இல்லையென்றால் ஓட்டால் அடியுங்கள் !"என்றார் ! அவர் வெற்றி பெற்றார் !

தயவு செய்து பா.ஜ.க.வை ஓட்டால் அடித்துவிடாதீர்கள் !!!!








 

1 comments:

பாரதசாரி said...

என் கேள்விகள்:
1. ஆம் ஆத்மி கட்சியின் தில்லி வெற்றி(!) பற்றி.
2. ஆம் ஆத்மியின் நாடளுமன்ற தேர்தல் பிரவேசம் பற்றி.
3. பொதுவாக "ஊழலை ஒழிப்போம்" என்ற பிரச்சாரம் குறித்து உங்கள் கருத்து.
4. "மூன்றாம் அணி" ‍ = அப்ப‌டி ஒன்று சாத்தியமா?
5. ராகுல் காந்தி பிரதமர் ஆவது? (என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை)
6. ந மோதி பிரதமர் ஆனால்?

பதிவில் பதில்கள் (நேரம் இடம் கொடுத்தால்) அள்ளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.