Thursday, January 09, 2014

பெட்றோல் விலை ஏற்றத்திற்கு 

வாஜ்பாயும்,பா.ஜ.க வுமே காரணம் .....!!!




1904 ம் ஆண்டு என்வீட்டிலிருந்து முன்று கிமி தூரத்தில் இருக்கும் பஜார் போக ஷார் ஆட்டோவிற்கு 4/- ரூபாய் கொடுப்பேன் ! இப்போது 15/- ரூ கொடுக்க வேண்டியதுள்ளது ! 

"என்னசார் செய்ய ? பதினைந்து நாளுக்கு ஒருதரம் விலையை ஏத்தறான் ! " என்கிறார் ஆட்டோகரர் !

1989ம் ஆண்டு லிட்டர் 8 /-ரூ இருந்த பெட்ரோல் இன்று 74/- ரூ !

பெட்ரோல் விலையை அரசு தான் நிர்ணயித்து வந்தது ! சர்வதேச சந்தைல கச்சா எண்ணைய பத்தி கவலைபடாமல் விலையை நிர்ணயித்து வந்தது !

எண்ணை கம்பெனிகள் பொதுத்துறையில் இருந்தது ! கொஞ்சம் கொஞ்சமாக பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு கொடுத்தாங்க !

பெட்றோல்  பங்குல பைப்ப புடிச்சு பெட்ரோல் ஊத்திகிட்டு இருந்தவர் தான் தீரு பாய் அம்பானி! 

இன்னிக்கி அவரு மகன்களுக்கு சுனாகத்துல 15000 கோடில எண்ணை சுத்தீஅரிப்பு ஆலை   இருக்கு ! 

அம்பானிகள் வாஜ்பாய்க்கு ரொம்ப வேண்டியவர்கள். ! பா.ஜ.க வுக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவர்கள் ! 
சர்வதேச கச்சா எண்ண விக்கற விலைக்கும் இங்க அரசு நிர்ணயிக்கிற விலைக்கும் வித்தியாசம் அதிகமாயிருக்கு ! அரசு ஏன் நிர்ணயிக்கணும் ! நாங்க எண்ணைக்கம்பேணி ஆளுக சேரந்து விலையை நிர்ணயம் பண்ணீக்கரோம்னு அண்ணன் வாஜ்பாய் கிட்ட சொன்னங்க ! யாரு? அம்பானி போன்ற தனியார் கம்பெனிங்க !

பாவம் ! சின்ன அமபானி ங்க.தாத்தா அம்பானி ஆகியவங்க சோத்துக்கு சங்கடப்படறாங்க ! அப்ப நீங்க உங்களுக்கு கட்டுபடியாகிற் விலைய நீங்களே முடிவு செஞ்சுக்குங்க ! அப்படின்னி வாஜ்பாய் சொன்னாரு ! 

அதுக்கான உத்திரவை பா.ஜ.க  அரசு போட்டது !


இப்ப எண்ணை விலையை அரசு நிர்ணயிக்கலை! இந்த முதலாளிகள்தான் முடிவு செய்யறாங்க ! 

இத வாஜ்பாய்தான் செய்தாரு !

திருடன் ஓடும்போது "திருடன்-திருடன் ' நு கத்திக்கிட்டே போவானாம் !

பா.ஜ.க வும் பெற்றோல் விலையைகுறை ன்னுகூட்டத்தோட கூட்டமா கத்துது 
 
இது பொன் ராதாகிருஷ்ணனுக்கு தெரியும் ! 

காரைக்குடி ராஜா வுக்கு தெரியும் !

ஊசிப்போன கணேசனுக்கு தெரியும் !

வாயைத் திறக்கமாட்டங்க !

பொருளாதார மேதை ஆடிட்டர் குருமூர்த்தியாவது வாயை தீறக்காரா பாப்பம்? 






























2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

யாருமே வாயைத் திறக்கத்தான் மாட்டார்கள் ஐயா.
பாவம் மனிதர்கள்

'பரிவை' சே.குமார் said...

அதுசரி... அரசியலய்யா இது....