Sunday, May 18, 2014

"சுப்பையா"வின் நினவு தினம்  இன்று ....!!


"சுப்பையாவின் "

நினைவு தினம்!

 விவசாயிகளை ஒன்று திரட்டி லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் பங்கு போட்டு கொடுத்தார் ! மூன்று  ஆண்டுகள் ஆட்சி செய்தார் ! நிலமிழந்த ஜமீந்தார்களுக்கு ஆதரவாக  இந்திய ராணுவம் தெலுங்கானாவுக்குள் புகுந்த பொது அதனை எதிர்த்து தீரமிக்க போராட்டத்தை நடத்தினார் ! விவசாயிகள் உழுது கொண்டிருக்க வயல் வரப்புகளில் துப்பாக்கி ஏந்திய பொராளீகள் அவர்களை காத்தனர் ! இந்தியாவின் மையப்பகுதியில் ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் மூன்ரு ஆண்டுகள் நடந்த பாட்டளிகளின் ஆட்சியை "நேருவும் ராஜாஜியும் " நய வஞ்சகம் பேசி நிர்மூலமாக்கினர் ! அந்த போராளிகளின் தள நாயகன் தான் எங்கள் சுந்தரய்யா ! ஹைதிராபாத்தில் உள்ள சுந்தரய்யா கேந்திரத்தை உணர்வுள்ள ஒவ்வொரு இடது சாரியும் சென்று பாருங்கள் ! அவருடைய நினைவு தினம் இன்று !!!!

("சுப்பையா" என்பது சுந்தரய்யாவின் ரகசிய பெயர் ) 

0 comments: