Friday, June 16, 2017






எம்.ஜெ .அக்பர்


என்ற ராஜாங்க அமைசர் ...!!!






மொபாஷார் ஜாவித் அக்பர்  என்ற எம்.ஜெ அக்பர்   மோடி அமைச்சரவையில் ராஜாங்க அமைசராக (MOS ) இருக்கிறார் .


மத்திய அரசு செயலகத்தில் ராஜாங்க அமைச்சர்களுக்கு தனியாக "குளு குளு " வசதி கொண்ட அறை  உண்டு . தனி செயலாளர் வசதி உண்டு. டெல்லி யிலிருந்து எங்கு போகவும் விமானத்தில் பயணம் செய்யலாம் கூட ஒருவரை அழைத்து செல்லலாம் . சம்பளம் பென்சன் எல்லாம் உண்டு.


ஆனால் ஒரு கொப்புகூட அவர்கள் பார்வைக்கு வராது . எல்லாம் துறை அமைசசரோடு  நின்றுவிடும் . துறை செயலாளர் அல்ல - அவருடைய "சப்ராஸி " கூட   மதிக்க மாட்டான்.


இவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்கலாம். அமைசசர் என்ன சொன்னாரோ அதை கிளிப்பிள்ளை பொலசொல்லவேண்டும்.பிரதமர் சொன்னதை சொல்லவேண்டும்.


" நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை  உலகம் பூ றாவும் புகழ்கிறார்கள்  "என்று அக்பர் சொன்னார். அவர் படம் போட்டு செய்தியாக வந்தது .

அக்பர் வெளி உறவுத்துறையில் இருக்கிறார். அரபு நாடுகளிடையே மோடி முஸ்லிம்களின் நண்பர் என்று பிரசாரம் செய்வது அவர் பணி  அக்பருக்கு  சௌதி அரேபியாவோடு செல்வாக்கு உண்டு. சர்வதேச இஸ்லாமிக் மையத்தோடு பழக்கமுண்டு. 


வங்காளியான இவர் ஜார்கண்டு மாநிலத்திலிருந்து மாநிலங்கள் அவைக்கு பா.ஜ..க வால்  அனுப்பப்பட்டார்.


இதற்கு முன் இவர் காங்கிரஸ்  எம்பி யாக இருந்தார். கிஷன்கஞ்  தொகுதி எம்>பி ஆக இருந்தார் .ராஜிவ் காந்திக்கு மிகவும் வேண்டியவர் .

பின்னர் என்ன காரணத்தாலோ பா  ஜ.க வில் சேர்ந்தார். 


அடிப்படையில் இவர் ஒரு பத்திரிகையாளர். பத்திர்கையாளர்களை தன் வசப்படுத்த பா.ஜ.காவுக்கு இவர் மிகவும் தேவைப்படுகிறார்.


0 comments: