Monday, February 12, 2018




"காங்கிரஸ் இல்லாத பாரதம் அல்ல !காங்கிரசும் ,பா.ஜ.கவும் இல்லாத பாரதம் வேண்டும் !!"


மதுரை சந்திர சேகர பாரதி  பேச்சு 


"காங்கிரஸ் இல்லாத பாரதம் அல்ல நாம் வேண்டுவது> காங்கிரசும் பா.ஜ.க வும் இல்லாத பாரதம் வேண்டும் " என்று சார்பாளர்களின் விவாதத்தை துவக்கிவைத்தமதுரை சார்பாளர் சந்திர சேகர பாரதி பேசினார் .

"காங்கிரஸ் "பிளான்"  போட்டு கொடுக்கும் அதனை எதிர்ப்பது போல் பா.ஜ.க எதிர்க்கும் .பதவிக்கு வந்ததும் காங்கிரசுபோட்ட "பிளானை " நிறைவேற்றும்."என்று பாரதி விளக்கினார் .மதுரை மாண்டல ஓய்வூதியர் சங்கத்தின் செயலாளரான பாரதியை  சார்பாளர்கள் விவாதத்தைதுவக்கி வைக்கும் பணியை அளித்தது பெருமைக்குரிய ஒன்று.

"மோடி இந்தியா வளருகிறது என்கிறார். இல்லை பிரசினைகள் தான் வளருகினறன> மக்களின் வேதனைகள் தான் வளருகின்றன " என்று கூறிய பாரதி ." ஸ்மிருதி இரானி அம்மையார் .பத்திரிகைகள் தங்கள் பணியை சிறப்பாக  செய்ய வேண்டும் "என்று கூறினார் .அமிதா ஷாவின் மகன் செய்த ஊழலை அம்பலப்படுத்திய wire பத்திரிகையின் மீது 100 கோடிக்கு வழக்கு போட்டிருக்கிறார்.என்று குறிப்பிட்டு ஆளும் பா ஜ க வின்  இரட்டை நாக்கை விளக்கினார்.

சார்பாளர்கள் விவாதம் தொடருகிறது.

0 comments: