Wednesday, February 28, 2018




பெரிய வெங்கடராமனும் ,

சின்ன வெங்கட்ராமனும் ...!!!






பெரிய வெங்கடராமன் படிப்பில் புலி . விஞ்ஞ னத்தில் மகாகெட்டிக்காரன். 19 வ ய தில் அறிவியலில் பட்டம் பெற்றுவிட்டான் .மிகவும் சனாதனமான குடும்பம் .மாமன்.சித்தப்பா ,பெரியப்பா ,அத்தான்,அமமான்சேய் என்று அவன் வயதை ஒத்த உறவினர்களும் நண்பர்களும் ஏராளமாக இருந்தனர் .   

அவன் நன்பர்கள் கோஷ்ட்டியில் இன்னொரு வெங்கடராமன்.இருந்தான் அவன் சிறுவன் . அதனால் அவனை சின்ன வெங்கடராமன் என்று கூப்பிடுவார்கள். 

பெரிய வெங்கடராமனுக்கு வீட்டில் பெரியவர்கள் திருமணம் செய்விக்க விரும்பினார்கள்.பெண் தேட ஆரம்பித்தனர் பெரியவெங்கடராமணனுக்கு இதில் இஷ்டமில்லை.  லோகசுந்தரி   என்ற பெண்ணை அவன் மணக்க விரும்பினான். ஆனால் அந்த காலத்தில் (1907) இது நடக்க கூடிய காரியமா.பாவம் நொந்து நூலாகி நண்பர்களிடம் புலம்பிக்கொண்டிருந்தான்நண்பர்களும் அன்றைய நிலையில்  தவித்தார்கள்.

சின்ன   வேங்கடராமனுக்கு புரிந்தும் புரியாத வயது. பெரியவர்கள் எதோதவறுசெய்கிறார்கள்  என்பதைமட்டும் உணர்ந்தான்.  தாத்தாவிடம் போய் "தாத்தா ! வெங்கிட்டுவுக்கு இந்த கலயாணத்துல இஷ்டமில்லை னு தோணுது .அவன் வேற  பொண்ண கலயாணம் பண்ணிக்க விரும்பாரான்  ! "னு சொல்லிட்டான் .

.ஒரேரகளை ! விசாரித்ததில் அந்த பெண்பெயர் லோகசுந்தரி   என்று அறிந்தனர் ! அந்த பெண்ணை யே   முடிவெடுக்க முடியவில்லை. காரணம் அந்த பெண் பெரியவெங்கடராமன் "சாதி" இல்லை.

"சாதி என்ன சாதி.கலையாம்னா ஆண்சாதி பெண்சாதி தான்  வேணும் " னு சின்ன வெங்கடராமன்   கத்த     பெரியவர்கள் சமாதானமடைந்து பெரிய வெங்கடராமன் -லோகசுந்தரி   கல்யாணம் நடந்தது .(1907)             

 பெரிய வெங்கடராமன் தான் பின்னாளில் நோபல்பரிசு பெற்ற sir c .v  ராமன் .


சின்ன வெங்கடராமன் தான் மார்க்சிஸ்ட் கடசியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் ,மாநிலசெயலாளராகவும் இருந்த M .R வெங்கடராமன் !!!


0 comments: