Tuesday, November 25, 2014

நினைக்க நினைக்க 

இனிக்கும் செய்தி...!!!

தாழையுத்து என்ற சங்கர் நகர் அருகில் இருக்கும் கங்கை கொண்டானில் "கொலா" தொழிற்சாலையை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடினார்கள் ! அரசு உட்பட எவரும்கண்டுக்கல ! சிவகங்கைமாத்தூரில் கம்யுனிஸ்டுகள்  "கோலா" கம்பெனியை எதிர்த்து பொராடினார்கள் ! கண்டுக்கல ! ஜார்கண்டில் ஒரு ஆற்றையே 60 மைல் நீளத்திற்கு "கொலா" கம்பெனிக்கு விற்று விட்டர்கள் !கண்டுக்கல ! இந்த போரட்டங்களில் பங்கு கொண்ட மனிதனுக்கு இது பற்றிய செய்தி வந்தால் மனம் நிறைவையாவது தரும் ! அதே மன நிலைதான் "கத்தி" படத்தை பார்த்த கம்யுனிஸ்டுகளூக்கும் !

 ஒரு இலக்கிய படைப்போ,கலைப்படைப்போ ,புரட்சியை நடத்தி விடாது ! ஆனால் பிரும்மாண்டமாக நடக்க விருக்கும் அந்த புனிதப் போரின் முன்னணிப்படையாக அவை sappers and miners ஆக செயல்படும் ! அப்படிப்பட்ட advance guard ஆக செயல் பட கலை இலக்கிய வாதிகளை தூண்டும் செயல்தான் கம்யூணீஸ்டுகள் "கத்தி "பற்றி விமரிசிப்பது ! 

புரட்சி நடந்த பிறகும் கூட சோவியத்தில் நிலத்தில் இறங்க விவசாயிகள் பயப்பட்டர்கள் ! "குலக்குகள்" மீண்டும் வந்து விடுவார்களோ என்று பயந்தார்கள் ! அவர்களுக்கு புரட்சி என்றால் என்ன என்று தெரியாது ! அவர்களுக்கு  புரட்சி பற்றி கற்றுத்தர லெனின் அவர்கள்  கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் அழைத்தார் ! அப்பொது உருவானது தான் "Battle ship...." , "October ...", Blue mountain" போனற படங்கள் ! இவை புரட்சி நடக்கும் போது காமிரவும் கையுமாக எடுக்கப்பட்டது அல்ல !

எங்கள்தலவர் "சுனில்மைத்ரா " அவர்கள்குறிப்பிடுவார்கள் !" சோவியத் புரட்சி பற்றி ஐம்பது அறுபது புத்தகங்களாவது வந்திருக்கும் ! நான் சுமார் முப்பது புத்தகங்களைத்தான் படித்துள்ளேன் மீதமுள்ளதை படிக்க முடியவில்லை " என்று குறிப்பிடுவார் !

புரட்சிப்படை வரும் பொது எதிரிகள் ஒளிந்திருந்து தாக்குவார்கள் ! எதிரிகளிடமிருந்து வீரர்களை பாதுகாக்க முண்ணனிபடை செல்லும் ! அது வீரர்கள்செல்ல விருக்கும் பாதையை செப்பனிடும் ! அங்குள்ள கண்ணி வெடிகளை அகற்றும் ! ஒளிந்திருக்கும்  எதிரிகளின் முதல் தாக்குதலை சந்திக்கும் ! எதிரிகள் எங்கு பதுங்கி இருக்கிறார்களென்பதை பின்னல் வரும் வீரர்களுக்கு அடையாளம் காட்டும்!எதிரிகள் பகுதிக்குள் சென்று அந்த மக்களை நம் பக்கம் இழுக்க கலை இலக்கியத்தை பயன்படுத்தி கருத்து விதைகளைத் தூவும் !மிகுந்த   சேதத்தை சந்திக்கும் ! இந்த முண்ணணிபடை போரில் மிகவும் முக்கியமான பணியை தன்னலம்கருதாது செய்யும்! 

இதனை செய்யும் கலைஞர்கள் எழுத்தாளர்கள் தான் முற்போக்கு எழுத்தாளர்கள் ! புரட்சி கலைஞர்கள் ! 

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் ,கலைஞர்கள் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 20.,21,22 ம்தேதிகளில் திருப்பூர் என்ற திரு நகரத்தில் கூடப்போகிறார்கள் !

நினைக்க நினைக்க இனிக்கும் செய்தி !

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

திருப்பூர் மாநாடு சிறக்கட்டும் ஐயா