Friday, April 24, 2015

"மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி !"

"வாழ்க ! வாழ்க !" என்று ஒலித்தது !!!

90 ம் ஆண்டுகளின் ஆரம்பம் ! செங்கலைக் காட்டி இந்துத்வா காரர்கள் கலகம் செய்து கொண்டிருந்த காலம் ! இவர்களை சந்திப்பது எப்படி ? என்று இடதுசாரி கலைஞர்கள் ஆலோசித்தபடி இருந்தனர் !

இந்தியா பூரவிலும் கலைஞர்களை வரவழைத்து அவர்களூக்கு  போதனை செய்ய முடிவு செய்யப்பட்டது !

தமிழ் நாட்டிலிருந்து அருணன் தலமையில், குமபகோணத்தைஸ் செர்ந்த ஜீவகுமார்,பிரளயன்,மதுரை டாக்டர் செல்வராஜ் ஆகியொரொடு நானும் சென்றிருந்தேன் ! 

மத்திய குழுவின் மெற்பார்வையில் பயிற்சி நடந்தது ! முழுக்க முழுக்க அதனை நடத்தியவர் சீத்தாரம் எச்சூரி அவர்கள் ! மேடைகளில் அவரை பார்த்திர்ந்தாலும் மிக அருகில் அவருடைய பெச்சைக்கேட்டது அப்போது தான் ! 

இந்த முகாமில் அரூணன் அவர்கள் தமிழக நிலமையை விவரித்து நமது கலைப்பணி எப்படீருக்கிறது என்பது பற்றி விவரித்தார்கள் ! நானும் என்முறை வந்த பொது நாம் என்ன செய்யலாம் என்பது பற்றி பேசினேன் !

செக்கச்சிவந்த மேனி ! சுருண்ட முடி ! கூரிய மூக்கு ! அகன்ற வாய் ! குழிவிழுந்த மோவாய் ! கருப்பு சட்டை,கால்சராயில் காம்பீரமாக அவர் பெச ஆரம்பித்தார் ! ஆற்றொட்டம் போன்ற ஆங்கில உறை ! பண்டைய இலக்கியங்களிலிருந்தும் ,கலை வெளிப்பாடுகளீலிருந்து மேற்கோள் காட்டிய பேச்சு ! நவீன நாடகங்கள், சமகால இலக்கியங்கள் , நவீனத்துவம் .பின் நவீனத்துவம் என்று பெருமழையாய் கொட்டினார் ! 

தமிழ் நாட்டிலிருந்து வாந்திருந்த எங்களைப்பர்த்து "நீங்கள் "சோ" ராமசாமியின் சம்பவாமி யுகே யுகே" என்ற நாடகத்தைப் பார்த்திருகிறீகளா ? என்று கேட்டர் ! நான் கையைத்துக்கீனென் ! புராணங்களையும்,இதிகாசங்களையும் அவர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் ?நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது! அவை நமக்கும் சொந்தமானது தானே ? '" பிரமிப்பில் நாங்கள் ஆழ்ந்து கொண்டிருந்தோம் ! 

இந்தியாவின் முக்கிய கலை ஆளுமைகள் அமர்ந்திருந்தனர் ! என் நினைவு சரியென்றால் ஹபீப் தன்வீர் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார் ! இயக்குமர் ஏம்.எஸ். சத்யூ வும் இருந்த ஞாபகம் !

நாங்கள் தமிழ்நாடு திரும்பினோம் ! 

த.மு.ஏ.சவின் மாநில மாநாடு நடக்க விருந்தது ! அதனை கோவையில் நடத்த முடிவாகி இருந்தது!

சங்கத்தின் மைய உறுப்பினர்கள்  மாநாடு நிகழ்ச்சி நிரல் பற்றி விவாதித்து முடிவு செய்தொம் !

மாநாட்டிற்கு சிவத்தம்ம்பி, ஜெயகாந்தன் ,ஆகியொரைக் கூப்பிட முடிவானது ! நான் என்பங்கிற்கு சீத்தாராம் எச்சுரி அவர்களி கூப்பிட வெண்டும் என்று ஆலொசானை கூறினேன் !

 

அவர் வந்தால் போகவர விமானச்செலவு ஆகுமே என்ற கவலை வந்தது ! கோவை மாவட்ட செய்லாள்ராக இருந்த வக்கீல் ஆனந்தன் அது எங்கபாடு ! கூப்பீடுங்கள்" என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார் 1 

த.மு ஏ சவின் வரலாற்றில் கோவை மாநாடு தன் முத்திரையப்பதித்த ஓன்றாக மாறியது ! 

சீத்தாராம் அவர்களை விமான நிலையத்திலிருந்தூ அழைத்து வந்து  ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு எனக்கு வந்தது ! என்னோடு கானரா வங்கி தோழர் மாதேஸ்வரன் இருந்தார் ! இது தவிர 

 ஏஸ் ஏ.பி, கருணாகரன்,மாணீக்கம் ஆகியோறோடு வீமான நிலயம் சென்றொம்! அவருக்கு சால்வை இட்டு வரவேற்கும் வாய்ப்பினை சங்கம்  எனக்கு அளித்து !

கிரிம் கலர் பாண்ட்டும்,வெள்ளைசட்டையும் அணிந்திருந்தார் !  குளித்து வந்தார் ! மாலை பெசுவதற்கான குறிப்புகளை தயார் செய்தார் ! உணவருத்திணொம் ! சிறு தூக்கம் ! தூங்கும் போஹும் அதே பாண்ட் அதே சட்டை ! 

"ஏன் தோழர் ? ரிலாக்ஸ்டா கைலி உடுத்திக்குங்களேன்?" 

"you are too inqusitive ! comrade ? "

"how ?" 

"a r r e baabaa ! i forgot to bring my dress ! ikept my dress on the table ! my inner garments are there ! but paant and sahirt i forgot ! "

தோழர் மாதேஸ்வரன் தான் அந்த யொசனையை சொன்னர்! அருமையான மயில் கண் ஜரிகை செலம் குண்டஞ்சு வேட்டியை பொட்டு அண்ணணை  மாப்பிளை மாதிரி மேடைல ஏத்திடுவோம் என்ற்றர் ! தயங்கிய சீத்தாராம் எச்சூரி அவர்களை எல்லருமாகச்சேர்ந்து அமுக்கி விட்டொம் !

மாலை மெடையில் ஏறினார் !  செக்கச்சிவந்த மெனி ! சுருண்ட முடி ! கூறியமூக்கூ ! அகன்ற வாய் ! குழிவிழுந்த மோவாய் ! ஜரிகை வேட்டி  ! மாப்பிள்ளை போல   மேடையில் ஏறினார் ! 

"சீத்தாராம் எச்சூரி !  வாழ்க !வாழ்க !!"

என்ற கோஷம் வீண்ணைப் பீளந்தது

"மார்க்சிஸ்ட் கட்சி வாழ்க !வாழ்க!

என்று என் காதில் ஒலித்தது!!!

0 comments: