Friday, April 17, 2015

 Kashyapan

April 11 at 8:33pm · 

திருப்பூருக்கு சென்று வந்தேன் ........!!!

சென்ற 2014ம் ஆண்டின் இறுதியில் த.மு.எ.க சங்கத்தின் 13 வது மாநில மாநாடு திருப்புரில் நடைபெறும் என்று சங்க தலமை அறிவித்தது ! 1975ம் ஆண்டு நடந்த முதல் மாநாட்டில் இருந்து 12 மாநாடுகலிலும் கல்ந்து கொண்டேன் ! இதிலும் கலந்து கொள்ள விரும்பினேன் ! தலைவர் தமிழ் அவர்களுக்கும் செயலாளர் வெங்கடெசன் அவ்ர்களுக்கும் தகவல் கொடுத்தேன் ! "மூத்த எழுத்தாளர் ! கண்டிப்பாக வாருங்கள் ! செயற்குழுவில் பேசி அழைப்பினை அனுப்புகிறேன் !" வெங்கடெசன் அவர்கள் மின் அஞ்சல் அனுப்பினார்கள் !

ஓய்வு பெற்ற எல்.ஐ.சி ஊழியன் என்ற முறையில் விருந்தினர் அறையினை எல்.ஐ.சி தொழர்கள் முளம் ஏற்பாடு செய்து கொள்வதுண்டு ! ஆனால் திருப்பூர் கிளையில் விருந்தினர் அறை இல்லை ! " தங்கும் வசதி சரியாக இல்லை என்றால் போக வேண்டாம் என்று என் மகன் கூறினான் !.சங்கடமாக இருந்தது !

ஒரு யோசனையில் தோழர் லெனின் மிர்னியை தொடர்பு கொண்டேன் ! "கவலியே படாதீர்கள் ! திருப்பூரில் இறங்கியதிலிருந்து திரும்பி ரயிலடியில் ஏறும் வரை நான் பொறுப்பு ! உங்கள் மகனைபோல் இருந்து பர்த்துக் கொள்கிறென் என்றார் '!

26 மணி நேர பயணத்தில் 18-3-15 அன்று மாலை 4.40 க்கு நானும் முத்துமினட்சி அவர்களும் திருப்பூர வந்து செர்ந்தோம் !! லெனின் தோழர் எங்களை விடுதியில் கோண்டு விட்டார்! "நான் காலை வருகிறேன்! வேறு என்ன வேண்டும் ?' என்று கேட்டார்!

திருப்பூர் பழகிய ஊர் ! விழிப்பு நட ராசனை பார்க்க வேண்டும்! தீக்கதிரில் பணியாற்றிய பொன்ராம்.தூயவன் ஆகியவர்களை சந்திக்க வேண்டும் ! எல்லவற்றிர்க்கும் மேலாக " எங்கள் தங்கம் ராஜாமணியின் துணைவியாரைபார்க்க வெண்டும் " என்றேன்!

அவர் சென்றபின் குளித்து உடை மாற்றி அமர்ந்தேன் !அறைக்கதவு மணி சிணுங்கியது ! வாருங்கள் என்றேன் !

விழிப்பு நடராசன் ! அதே உடற்கட்டு! சிவப்பு நிறம்-இடுங்கிய கண்கள் ! கொஞ்சம் வயதான தோற்றம் ! கிட்டத்தட்ட நாற்பது வருடத்திற்கு முந்தய அதே விழிப்பு நடராசன் ! கட்டிதழுவிக் கொண்டோ

0 comments: