Tuesday, October 27, 2015


"பாட்டு அவர்களுக்கு 

ஓட்டு எங்களுக்கு .....!!! "

1950 -54 ம் ஆண்டுகளில் என் சகோதரர் மணிமுத்தாறு அனைக்கட்டுமான திட்டத்தில்பணியாற்றிவந்தார் நாங்கள் வசித்த வீட்டிற்கு அருகில் தான் பிரும்மாண்டமான வொர்க் ஷாப் இருந்தது.அதில் ஃபோர்மான் ஆகபணியாற்றியவர்தான் சீதாராம ஐயர்.

பாளயங்கோட்டை திம்மராஜ புரத்தை செர்ந்தவர். குடும்பம் பாளையில் இருக்க அவர் ஒர்க்ஷாப் ஓரத்தில் தங்கிக் கொண்டார். இரவு ஒண்பது மணியானல் ஒரு கட்டிலில் அமர்ந்து கொண்டு பாடத்துவங்குவாற்.தியகராஜர் ராமர் மெல் பாடிய கீர்த்தனை . பின்னர் திவ்யபிரபந்தம். நாமாவளி. பஜனை பாடல்கள். தீப பிரதட்சண பாடல்கள் என்று இருக்கும்.

நெல்லைமாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து,பாபனாசம் வரை தமிரவர்ணிகரையிலுள்ள கொவில்கள் அத்துணையிலும் அவருடைய பாட்டு ஒலிக்கும். எந்த பஜனைகோஷ்டியானாலும் அவரைத்தான் கூப்பிடுவார்கள்.

அவருடைய பொதுப்பணி அதொடு முடிவடைந்து விடுவதில்லை. அணைக்கட்டில் நூற்றுக்கானக்கான கூலிகள் வேலை பார்க்கிறார்கள். குறிப்பாக செலம் மாகவட்டத்திலிருந்து"ஒட்டர்கள்" என்ற தெலுங்கு /கன்னட மொழி பெசும் மக்கள் அதிகம் உண்டு. 

இது தவிர கேரளத்திலிருந்து "மாப்ளாஸ்" என்று அழைக்கப்படும் இஸ்லாமிய தொழில் தெரிந்த் கூலிகளூம் உண்டு. 5 டன் 10 டன் பாறைகளைக்கூட கொஞ்சம்கூட சேதமில்லாமல் நூரு அடி உயரமானாலுக்,பள்ளமானாலும் தூக்கி செல்லும் தோழில் நுணுக்கம் தெரிந்தவர்கள். பத்து பத்து பேறாக "எத்திருமாலி ஐலி ஜாலா " என்று அவர்கள் கோஷம் போட்டுக்கொண்டு பாறைகளை தூக்கீச்செல்வது அற்புதமான காட்சியாகும்.

இந்த கூலிஜனங்களை ஓன்றுபடுத்தி சங்கம் அமைத்தவர் சீத்தாராம அய்யர். அந்த சங்கத்திற்கு தலைவராயிருந்தவர் முருகானந்தம் என்ற கம்யூணீஸ்ட். முருகானந்தமும், அய்யரும்மிகவும் நெருக்கம். அணைக்கட்டு பகுதிக்குள் முருகானந்தம் வரக்கூடாது என்று தடை போட்ட பொது

கூலி ஜனங்களை திரட்டி ஆர்ப்பாட்டம் செய்தவர் சீத்தாரம அய்யர்.

"நீர் கம்யுணிஸ்டா? "என்று கெட்ட பொது "ஆமாம்! அதுக்கு என்ன? "என்றுபதில்கேள்விகேட்டவரவர்.

"கோவில்,பஜனை,பாட்டு நு போரெறய்யா?"

ஓ! அதுவா! இந்த பயலுகளுக்கு ஒண்ணும் தெரியாது. எந்த கொவில்சாமிக்குஎன்ன பாடணும்னுகூட தரியாது.விவரம் கெட்டவங்க.ஆனா நல்லவங்க. நான் சொன்னா கேப்பானுங்க.இவங்க சொலறத் கெக்க ஒருகூடமிருக்கு.என்ன பண்ண.நான் சொல்ர ஆளுக்குஓட்டுபொடுவாங்க."என் பாட்டு அவங்களுக்கு .அவங்க ஓட்டு எங்களுக்கு . எனக்கு முருகானந்தம் ஜெயிச்சு எம்.பி ஆகணும்.அவ்வளவு தான்." என்று விளக்குவார்.

அணை கட்டி முடிந்து பிர்ம்மாண்டாமாக நிற்கிறது. ஆனால் அங்கு வேலை செய்த கூலிகள்?

பலரை வைகை திட்டத்திற்குஅனுப்ப ஏற்பாடுசெய்தார்.அவரை நெய்வேலிக்கு அனுப்பி விட்டார்கள்.நூற்றுக்கனக்கானவர்களை நெய்வேலிக்கு .அழைத்துச் சென்றார்.

சீததராமய்யருக்கு இலக்கியத்திலும் ஆர்வம் உண்டு. கூலி தொழிலாளர்களை ஒன்று படுத்திசங்கம் அமைக்க அவர் எடுத்த முயற்சிகளை நாவலாக எழுதினார். "நானா,நாமா " என்ற பெய்ரில் அந்த நாவல் "செம்மலரில்'தொடராக வந்தது. நெய்வேலி யில் பணியார்ரிய பிரகு ஓய்வு பெற்று சென்னையில் தங்கினார்."அணைக்கட்டிலிருந்து சுரங்கம்வரை" என்ற அவருடைய நாவலும் செம்மலரில் தொடராக வந்தது.

பின்னாளில் அவருடைய "நானா நாமா " நாவல் செம்மலர் ஆசிரியர்கே. முத்தையா அவர்கள் முன்னுரையுடன் நூலாக வந்தது.

த.மு எ.ச வின் மூத்த சென்னை தோழர்களூக்கு "ஜானகி காந்தன் " எனற எழுத்தாளரை தெரிந்திருக்கும். 

மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினரான தோழர் சீத்தராமன் தான் "ஜானகிகாந்தன் " என்பது தெரிந்திருக்காது...


0 comments: