Friday, October 09, 2015

(கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் )




"சபாஷ் பாலாஜி "

"keep it up "



அகில இந்திய மருத்துவ விற்பனைப்பிரதினிதிகளின் சங்க தலைவர்களில் ஒருவர் மஜும்தார் .
தமிழகத்தில் ஜோசப் ,கணேஷ் ஆகியோர் சங்கத்தை  முன் நின்று நடத்தியவர்கள்.
மதுரையில் ப்ரோஸ் கான், ஸ்ரீதர், ஜெரோம் , மறைந்த கோபி ஆகியோரை தெரியும். தஞசையில் பாலாஜி ,ரங்கராஜன் ஆகியோரை பழக்கமுண்டு.டை  கட்டி சூட்டு கோட்டு போட்டு கொத்தடிமைகளாக இருந்த விற்பனைப் பணியாளர்களை மனிதப் பிறவிகளாக்க சங்கம் பட்ட பாடு சொல்லி மாளாது. 

பாலாஜி அவர்களில் ஒருவர்.முக நூல் நபர்களுக்கு "பாலாஜி வெங்கடராமன் " என்றால் தெரியும். மருந்து உற்பத்தியாளர்களுக்கு ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.கலைஞர தொலைக்காட்சியில் "விடியலே வா " என்ற நிகழ்ச்ச்சியில் மருந்து தோழில் பற்றிய நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.பயனுள்ள கருத்க்க்களை ஆற்றோட்டமாக   பொழிந்தார்..
"மருந்து துறையில் முக்கியமாக பொது சுகாதாரம் அவசியம்." என்று ஆரம்பித்தார்." குடிநீர்,சத்தான உண்வு ,சுற்றுச்சூழல் இவை தான் பொது சுகாதாரத்திற்கு முக்கியம். இதனை அரசாங்கம் தான் செய்து தரவேண்டும்..
மக்கள் கணக்கு எடுக்கும் பொது ஒரு சதுர மைலுக்கு எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் என்று சொல்வார்கள், அதே போல ஒவ்வொரு ஆண்டும் மழைக்கு முன்பாக" கொசுக்கள் "  ஒரு சதுர மீட்டருக்கு எவ்வளவு என்று மகத்திய அரசு கணக்கு கொடுக்கும்.இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் அனுப்பப்படும். ஏப்ரல் அல்லது மேமாதம் அனுப்புபடும். ஜூன்,ஜூலை ஆகஸ்டு மாதங்களில் மழைக்கு முன்பாக குழிகளையும்,தண்ணிர் தேங்கும் இடங்களையும் சீர் செய்ய்வேண்டும். மாநில அரசுகள் இதனை செய்ய மாட்டார்கள். டோங்கு மலேரியா காயச்சல் வராமல்  தடுக்க  முடியாமல் போகிறது."
பெட்டி எடுத்த ஸ்ரீவித்யா  " ஜினறிக் மருந்து என்கிறார்களே ?" என்று இடைமறித்தார்.

"ஆம் ! ஜினறிக்,பிராண்டு என்று இரண்டுவகை உண்டு" என்று பாலாஜி விளக்க ஆரம்பித்தார்.

"மருந்து களின் ரசாயன சேர்க்கையை ஜீனரிக் எனலாம் அமெரிக்காவில் இதுதான் அதிகம் டாக்டர்கள் எதை எதை சேர்க்க வேண்டு ம் என்று எழுதுவார்கள்.விற்பனை செய்பவர்கள் அதனை சேர்த்து மருநதாக்கி தருவார்கள். உண்மையில் அமெரிகாவுக்கு ஏற்றுமதியாகும் ஜீனரீக் மருந்து களில் பெரும் பகுதி இந்தியாவிலிருந்து தான் செல்கிறது..புற்று நோய்க்கு ஒரு பிராண்டு மருந்து உள்ளது அதன் விலை 1,08,000 ரூ . அதூவெ ஜீனரிக் மருத்ந்தானால் .வெறும் 8000 ரூபாய்தான்"

"இந்தியாவில் லாபம் கொழிக்கும் தொழிலில் மூன்றாவது இடத்தில் உள்ளது மருந்து தயாரிக்கும் தோழில்." 

மருந்து தயாரிக்கும் தொழிலில் உள்ள நுடபாமான விஷயம்களை ஒரு சமுகத்தின   கண்ணோட்டத்தில்  பாலாஜி சித்தரித்தது  அற்புதமாக இருந்தது.

சபாஷ் ! பாலாஜி !!! 

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்