Friday, December 25, 2015

இடதுசாரிகள் தனியாக 

நின்றால் .......!!!



மதுரை கீழ  மாசி விதியில் நிறைய கிட்டங்கிகள் உண்டு. பலசரக்கு சாமான்களை மொத்தமாக வாங்கி அவ்வப்போது தேவையான சரக்கை கடைகளுக்கு கொண்டுவந்து விற்பார்கள்.இந்த கிட்டங்கிகளில் "பெருச்சாளி " தொந்திரவு அதிக மாக இருக்கும். வாரத்திற்கு ஒரு நாள்  அடித்து விரட்ட கடை சிப்பந்திகள் கூடு \வார்கள்..
கிட்டங்கியின் சகல வழி களையும் அடைத்து விடுவார்கள். சுவரில் மட்டும்  கீழ்பகுதியில்  உள்ள துவாரத்தை விட்டு வைப்பார்கள். சுவரின் வெளிப்பகுதியில் தடி யோடு சிலர் காத்திருப்பார்கள். கிட்டங்கியின் உள்ளெ உள்ளவர்கள் மூல முடுக்கில் ஒளிந்திருக்கும் பெருச்சாளிகளை  விரட்டுவார்கள்.,சுவற்றின் துவாரம் வழியாக ஒவ்வொரு பெரு ச்சாளியாக வரும்போது அதனை துவம்சம் செய்து விடுவார்கள்.

மார்க்சிஸ்டு கட்சியின் மறைந்த தலைவர்  எ.பாலசுப்பிரமணியம் அவர்கள் கூறுவார்கள். "நாம் எப்பொதுமே தனியாக இருக்கக் கூடாது; எதிரி அதைத்தான் விரும்புவான். நாம் மக்களொடு இருக்க வேண்டும். அது நமக்கு பாதுகாப்பும் கூடா "என்பார்.

இந்தியாவில் இது வரை எந்த ஒருகட்சியும் தனந்தனியாக ஆட்சியை  பிடித்தில்லை . காங்கிரஸ்,பா ஜ.க உட்பட .மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரீ..

1952ம் ஆண்டு தேர்தலில் பின்புறமாக வந்த ராஜாஜியின் தலைமையில் மாணிகவேலர் உட்பட சேர்ந்து தான் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டது. அப்போது பெரும்பான்மையாக கம்யூனிஸ்டுகள் தலைமையில்கூட்டணி வெற்றிபெற்றிருந்தது.காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க வில்லை 

1967லதிமுக கூட்டணியால் தான் வெற்றி பெற்றது.
அண்ண திமுக முதல் தேர்தலை திண்டுக்கல்லில் சந்தித்தது. மார்க்சிஸ்ட்கட்சி ஆதரவில் தான் வென்றது .

இது வரலாறு.'

இதுவரை எந்த கட்சியும் தனி பெரும்பான்மை பெறவில்லையா?

பெற்றது உண்டு!
மேற்கு  வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பெற்றது ஆனால் கூட்டணி கட்சிகளையும் அணைத்துக்கொண்டு அமைசரவையில் அவர்களையும் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைத்தது.

திரிபுராவிலும் இதே போல் ஆட்சியைப்பிடித்து அமைச்சரவையையும் அமைத்தது.

அரசியலில் நேர்மை , சகிப்பு உணர்வு, மக்கள் நலம் ஆகியவை மார்க்சிஸ்டு கட்சி க்கு மட்டும் அதிகமாகவே இருக்கிறது.

கூட்டணி என்பது தந்திரம் மட்டுமல்ல.
அது ஒரு அரசியல் நெறி !!!


0 comments: