Sunday, December 06, 2015

பார்த்த சாரதி கோவிலும் ,

வேங்கடகிருஷ்ணனும் .....!!!


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கொவிளின்முலவரின் திருநாமம் வேங்கட கிருஷ்ணன் ஆகும்.
பார்த்தனை சேவிக்காமல் நீர்  அருந்தமாட்டார் அந்த பெரியவர். மாடவிதியில் குடிருக்கிறார் .
அங்கிருந்து வெளியாகும் கீதாசாரியன் என்ற தத்தவார்த்த பத்திரிகையின் ஆசிரியரும் அவரே..
வைணவ தத்துவத்தில முனைவர் பட்டம் பெற்றவர.
சென்னைபலகளைக்கசகத்தில் வைணவ துறை தலைவராக பணியாற்றி வருகிறார்..  சென்ற ஆண்டு தோழர் நடராஜன் உதவியோடு அவரை அவர் வீட்டில் நானும் முத்துமீனாட்சியும் சந்தித்தோம்.

மதுரையில்னடந்த முற்போக்காளர்களின் கருத்தரங்கில்கலந்து கொண்டார்.

கம்பிரமான ஆகிருதி. நெற்றியில் முகம் மறைக்க திருமண். மேடையில் முன் வரிசையில் அமர்ந்திருந்த அவரை பார்வையாளர்கள் அதிசயமாக பார்த்தார்கள்..இந்த கூட்டத்தில் இவர் எதற்கு ?என்று அவர்கள் யோசித்திருக்கலாம்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது பற்றிய கருத்தரங்கு அது.
அவரை பேச அழைத்தார்கள்.

" உங்களுக்கு ஆச்சரியமாகவும்  அதிசயமாக்கவுமிருக்கும்-மேடையில் 
  என்னை பார்ததும் . நான் சொல்ல வேண்டியதை இங்கு  சொல்லாமல் வேறேங்கும் சொல்லிபயனில்லை "

என்று சொல்லிதன்பேச்சை ஆரம்பித்தார்.

டாக்டர்.வேங்கட கிருஷ்ணானின் முதாதையர். ராமபக்தர்கள்.தீவிரமானவைணவர்கள். அவருடைய பாட்டி ஒரு கனவு கண்டிருக்கிறார்.  ஸ்ரீ ராமர் வந்து எனக்கு கோவில் கட்டு என்று கூறி இருக்கிறார். பாட்டி இதனை தன்மகன்களிடம் சொல்லிருக்கிறார்.அவருடையமகன்கள் "ஆகட்டும் பணம் சேர்ப்போம்.பின்னர் கொவில்காட்டுவோம் என்றுகூறி இருக்கிறார்கள். இது நடந்தது சுதந்திரத்திகுமுன்பு. ஓரளவுபணம் சேரந்ததும்  முயற்சியில் ஈடுபட்டார்கள்.

ஸ்ரீ ராமரின் உத்திரவு அயோத்தியில் கட்டவேண்டும் என்பதாகும். சரயு நதி தீரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லி இருக்கிறார். மகன்கள் மிகுந்த சிரமப்பட்டு,மாட்டுவண்டி ரயில்  என்று பயணம் செய்து அயோத்தியை அடைந்துள்ளனர்.அவர்களுக்கு அதிர்ச்சி.

நதிக்கரையில் உள்ள இடத்தில் முஸ்லிம்கள் குடி யிருக்கிற்றார்கள். செய்வதறியாது திகைத்த அவர்களை ஒரு முஸ்லீம்பெரியவர் விசாரித்திருக்கிறார். . இவர்கள் தாங்கள் வந்த விஷயத்தை கூறி உள்ளனர்.
குடியிருப்பில் உள்ள முஸ்லிம்களை அழைத்துகூட்டம்போட்டிருக்கிறார்.பெரியவர். அவ்ர்கள் அங்கு ராமர் கோவில் கட்ட இடம் கொடுக்க சம்மதித்து,அதற்கானபட்டாவை தரவும் தயாராக இருந்தார்கள். 

கோவில் கட்டப்பட்டது அதற்கான பணத்தை வாங்க மறுத்துவிட்டார்கள்.
மாற்றாக பெருமாளின்கருட சேவையின் பொது வீதிவலம் வர தாங்கள் தான்  தூக்கி வர அனுமதி கேட்டிருக்கிறார்கள்..

பல வருடங்களாக கருட சேவை நடக்கிறது. 
"என் மூததையர்கலின் விருப்பப்படி நானும்  ஒவ்வொரு ஆண்டும் அயோத்தி சென்று சேவை செய்துவருகிறேன்." என்று டாகடர் வெங்கிட கிருஷ்ணன்  கூறி முடித்தார்.


அயோத்தியில் ராமர் கோவில் கட்டியாகி விட்டது முஸ்லிம்களின் உதவியோடு.

அதைக்கட்டியவன் 
தமிழன் !!! 








.

0 comments: