Sunday, September 25, 2016






சமஸ்கிருதத்தை ,

பா.ஜ .க . வால் ,

நட்டமாக நிறுத்த முடியாது ...!!!---10.





இந்துத்வா காரர்கள் "சம்ஸ்கிருத பாரதி " என்ற அமைப்பின் மூலம் சம்ஸ்கிருத வளர்சசி என்று ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில மதுரை கிழக்கு  தொகுதியில் மட்டும்  நிறைய டியூஷன் வகுப்புகள்  இவர்களால்நடத்தப்பட்டான்.இந்துத்துவா அதிகாரத்திற்கு வந்ததும் தமிழகம்  பூராவும்இவை  நடந்து வருகின்றன.

இந்தமைப்பின் தலைமையகம் டெல்லியில் உள்ளது . மொத்தம் நான்கு தேர்வுகள்.நான்காவது தேர்வு முடிந்தவுடன்  சான்றிதழ் தருகிறார்கள்.

இந்த சான்றிதழை வைத்துக் கொண்டு பல்கலையில் சம்ஸ்கிருத பட்டப்படிப்பில் சேரலாம்.

சான்றிதழ் தேர்வு வீட்டிலிருந்தே எழுதலாம்.டெல்லியிலுள்ளதலமை அலுவலகத்திற்கு மனு செய்தால்  அவர்கள்  பாடங்களைஅனுப்புவார்கள்.

தேர்வுக்கு உண்டான கேள்வித்தாள்கள் உங்கள்வீட்டிற்கு அனுப்பப்படும். நீங்கள் உங்கள்வீட்டில் அமர்ந்து கொண்டு தேர்வு  எழுதலாம். உங்களை கண்காணிக்க உங்கள் மனசாட்ச்சி மட்டுமே.

இப்போது புதிதாக தமிழ் மக்களுக்கு ஒரு சலுகை அளித்திருக்கிறார்கள். இந்த சம்ஸ்கிருத தேர்வை சம்ஸ்கிருதத்தில் தான் எழுத  வேண்டும் என்பதில்லை . உங்கள் தாயமொழி தமிழிலேயே சம்ஸ்கிருத தேர்வு எழுதி வெற்றி பெறலாம்.   இப்படி இவர்கள் சம்ஸ்கிருதத்தை வளர்ப்பது என்பது "இந்துத்வாவை " கொண்டு செல்வது தவிர வேறொன்றுமில்லை .

இந்த போலிகளை எதிர்த்து நிழற்சண்டை போடுகிறார்கள்.  "இந்துத்வாவை " அதன் கோரமுகத்தை எதிர்ப்பதை விட்டு மொழியை , எதிர்க்கிறார்கள்.

நாம் என்ன செய்யப்போகிறோம் ???


0 comments: