Friday, September 30, 2016









"கார்கில் " போரும் ,

போர்  நிறுத்தமும் ...!!!





பிரதமர் வாஜ்பாய் .  பாதுகாப்பு அமைசர் பெர்னாண்டஸ்.  ஆடு மேய்க்கும் சிறுவன் கார்கில் குன்றுகளின்  மேலே பாகிஸ்தான் ஆட்கள்   நடமாட்டமோருப்பதாக சொன்னான்.

ஜம்முவில் இருந்து காஷ்மீர்,லெபோன்ற பகுதிகளுக்கு செல்லும்சாலை அந்த குன்றுகளேஅருகே இருந்தன.ராணுவத்திற்கு செல்லும் "தளவாடங்கள் "செல்வது தடைபடும்.

தீவிரவாதிகளிடமிருந்து அந்த குன்றுகளை  பிடிக்க ராணுவம் விரும்பியது .மிகப்பெரிய மோதலுக்கு பிறகு அது நிறைவேறியது.அதே சமயம்மிக அதிகமான உயிர் சேதம் இந்திய ராணுவத்திற்கு  ஏற்பட்டது.

இதே நிலைமை மீண்டும் உருவாகாமல் இருக்க ராணுவம் திட்டம் தீட்டியது .அதன்படி குன்றின் மறுபக்கம் இறங்கி   அங்குள்ள தீவிர வாதிகளின் முகாம் களை  அழிக்க வேண்டும். அங்கு இந்திய ராணுவ நிலைகளை வைக்க வேண்டும். இது ஊடுருவலை தடுக்கும். காஷ்மீரும் நிம்மதியாக மூசசு விடும் . இத்திட்டம் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ள அனுமதி வேண்டி அனுப்பட்டது.  

பாகிஸ்தான் இதனை மோப்பம்பிடித்துவிட்டது.இதனை தடுக்க வேண்டும். அவர்களால் முடியாது>காரணம்  இந்திய  ராணுவத்தின் பெரும்பகுதி இங்கே  நிலை கொண்டுள்ளது.அவர்களை  பாக்கிஸ்த்தானால் எதுவும் செய்யமுடியாது . 

வடக்கே இருந்து இந்திய ராணுவத்தை திசை திருப்ப வேண்டும்.தெற்கே  ராஜஸ்தான் பகுதியில் ஒரு போர் முனையையை உருவாக்கினால் வடக்கிலிருந்து படைகள் தெற்கே அனுப்பப்படும்.இது  அழுத்தத்தை குறைக்கும்  என்று பாகிஸ்தான் கருதியது.ராஜஸ்தான் எல்லையில் உள்ள பிகானீர் தேர்ந்த்டுக்கப்பட்டது. எந்த ராணுவ நடவடிக்கை யானாலும் முதல் தாக்குதல் கேந்திரமான தொழிற்சாலைகள் தானே இருக்கும்.பிகானீரிலிருக்கும் 15000கோடி முதலீட்டிலிருக்கும் அம்பானியின் எண்ணை சுத்திகரிப்பு ஆலைமுக்கியமானதொன்றாகியது.அம்பானிக்கு  தகவல் போனபோது ஆலையா ,போர் நிறுத்த ஓப்பந்தமா என்ற கேள்வி எழுந்தது.

அம்பானி வாஜ்பாயை சந்தித்தார்.வாஜ்பாயாய் பிரிஜேஷ் மிஸ்ராவை சந்தித்தார். அம்பானியின் தனி விமானத்திலன்று இரவு பிரிஜேஷ் மிஸ்ரா  ராவல்பிண்டி சென்றார்.போர் நிறுத்த ஓப்பந்தம் கையெழுத்தானது.

வாஜ்பாய் அரசு ஆண்டு தோறும் "கார்கில் " வெற்றியை கொண்டாட முடிவு செய்தது. 


0 comments: