Thursday, July 25, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



"தேசிய நாடக பள்ளியின் ,


பட்டறை ........"



"தேசிய நாடக பள்ளி காந்தி கிராம் பல் கலைக்கழகத்தில் ஒரு பட்டறையை நடத்துகிறது.உ ங்களை ஒரு மாணவராகசேர்த்துள்ளேன் " என்று ராமானுகம் அவர்கள் எனக்கு தகவல் அனுப்பி ஒருந்தார். 76-77 ஆண்டாக இருக்கலாம்..நான் முத்த தோழர்  கே.முத்தையா அவர்களிடம் சொன்னேன்.

பொங்கய்யா! போங்க ! என்ன னு தெரிஞ்ச்சுக்கிடலாம் " என்று அவர் கூறினார்.மதுரையின் மூத்த எழுத்தாளரான ப.ரத்தினம் அவர்களும் நானும் அதில் கலந்து கொண்டோம்.   

எங்களோடு ஜெயந்தன், ஷாஜகான் கனி, மாணவர் மு.ராமசாமி ஆகியோரும் சேர்ந்தனர். பின்னாளில் தமிழ் திரையுலகில் சிறந்த கலை இயக்குனரான கிருஷ்ன மூர்த்தி ,தெலுங்கு  நடிகரான சாயநாத் (அப்போது 20 வயது ) என்று வந்தனர்.

ஆத்யம் ரங்காச்சாரி, பி.வி காரந்த் ,பிரேமா கராந்த், குரூப், பிரசன்னா ஆகியோர் வகுப்பு ஆசிரியர்களாக இருந்தனர்> ராமானுஜம்,மற்றும் எஸ்.பி சீனிவாசன் முழூ  வகுப்புகளையும் நிர்வாகித்தனர் .அந்த ஆண்டுதான் பட்டம் பெற்ற ராஜு ( ஒப்பனை ) உதவியாக இருந்தார்.

நாடக பிரதி எடுத்தல்,இயக்கம்,நடிப்பு, ஒப்பனை, பின் மேடைநிர்வாகம்,,நிறம் என்று பலதலைப்புகளில் வகுப்புகள் நடந்தன.

துன்பவியல்,இன்பவியல், நகைசுசுவை, அபத்த நாடக வகைகளும் அறி முகம் செய்யவிக்கப்பட்டது.

பத்து நாள் பயிற்சி முடிந்ததும், மதுர காந்தி கண்காட்ச்சி அரங்கில், குருப் எழுதிய "காங்கேயன் " நடக்க ஒத்திகை நடத்தப்பட்டது. பின்னர் பயிற்சி மாணவர்கள் தயாரித்த ந.முத்துசாமியின் நாற்காலி காரர்கள் என்ற நாடகம் அரங்கேறியது.காஸ்யபன் நாற்காலிக்காரராக நடித்தார்.

ஒருவாரம் கழித்து ராமானும்   அவர்கள் தலைமையில் மதுரை மாணவர்கள் கூடினோம். மதுரையில் நாடகங்களைப்போட ஒரு அமைப்பை உருவாக்கினோம். அதனை நிர்வாகியாக மாணவர் மு.ராமசாமியை இணைத்தோம்.

ராமசாமியின் மேற்பார்வையில் மதுரையில் தெருநாடகங்கள் போடப்பட்டன.ராஜாஜி பூங்கா,சாந்திநகர், பல்கலை,மற்றும் பாத்திமாக்கல்லூரி  வளாகம் ஆகியவற்றில் நாடகங்கள்  போடப்பட்டன.

மதுரையி பென்னர் -காக்கில் என்ற பிரிட்டிஷ் கம்பெனி இருந்தது.அந்த கம்பெனி தொழிலாளர்களின் தலைவராக எம்.பி ,ராமசந்திரன் இருந்தார்.மார்க்சிச கட்சி உறுப்பினறான அவர் தெருநாடகங்களை போடுவார்> தன்  நடக்குழுவுக்கு நிஜ நடக்க இயக்கம் என்று பெயர்வைத்திருந்தார்.மக்களின்பிரசினையை நாடகம் மூலமாக கொண்டுசெல்வது அவருடைய நோக்கம்.

தெரு நாடகங்களை போட்டுக்கொண்டிருந்த மு.ராமசாமி அவர்கள், இந்தப்பெயரை எம்.பி ஆர் வைப்பது சரியா என்று கேள்வி எழுப்பினார்.

இதனைப்பற்றி ராமானுஜம் அவர்களை கலந்து கொள்வது என்னு முடிவு செய்தென். 








0 comments: