Monday, July 29, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )




E .M . ஜோசப் ,

மாணிக்கம் ,

ஆகியோரும் 

நடித்தார்கள்...!!!




கொஞ்ச்ம கொஞ்சமாக பீப்பிள்ஸ் தியேட்டர் அறிமுகம் தொடர்ந்தது. மதுரை நகரத்தில் தைக்கால் தெரு,செல்லூர்,திருப்பறம் குன்றம், என்று வீதிகளில் கொட்டகை போட்டு நாடகங்களை நடத்தினார்கள்.  

முதல் நாடகமான "நெஞ்சில் ஒரு கனல்  "நாடகத்தில் ஒரு கம்பெனி அதிகாரி வேடத்தில் அன்று மருத்துவராக இருந்த தோழர் தா.ச.ரசாமானி அவர்கள் நடித்தார்கள். சாதாரணமாக பேசும் பொது கூ ட கொச்சை  தமிழில் அவர் பேச மாட்டாரா.பண்டித தமிழ்த்தான் அவர் பேசுவார். அடுத்த முறை அவருக்கு பதிலாக எல்.ஐ.சி ஊழியர் தி.வி நாராயணன் நடித்தார்.

இந்தநாடகத்தில் இரண்டு மாணவர்கள் பாத்திரம்வரும்.அதில் உபேந்திரனும் ,கலையான சுந்தரமும் நடித்தார்கள்.நல்லஉயரமும் கம்பிரமான தோற்றமும் நடுத்தறவயதும் கொ ண்டு   அவர்கள் வருவதை பார்வையாளர்கள் ரசிக்கவில்லை. ஆகவே செல்லூரில்  நாடகம் போடும் பொது இ.எம்.ஜோசப்,அவர்களை நடிக்க வைத்தோம்.  பள்ளிமாணவனைப்போல் இருந்த அவர் கடசித்தமாக பொருந்தினார்.. மற்றோரு மாணவனாக மாணிக்கம் அவர்கள் நடித்தார்கள்.

பொது வாழ்க்கையும்,தொழிற்சங்க பாணியும் ஜோசப்  நாடகங்களில் நடிக்க முடியாமல் செய்து விட்டது.

மாணிக்கம் தன இறுதிக்காலம் வரை பீப்பிள்ஸ் தியேட்டரின் முக்கிய நடிகராக விளங்கினார்.

பிற்காலத்து,அசாக் என்ற குமரேசன் கதாநாயகனாக நடிக்க வந்தார்.

கிட்டத்தட்ட 25 வருடங்கள்  இயங்கி வந்த இதன் முக்கியமான நாடகங்கள் பற்றி எழுதவிருக்கிறேன்.  

0 comments: